தமிழர் குடியின் தாய்குடி யார்? ஆதி தமிழனே குறவன்தான்!!!





தமிழர் குடியின் தாய்குடி யார்? ஆதி தமிழனே குறவன்தான்!!!



தமிழரின் வரலாற்றை சரியான முறையில் தமிழரிடம் கொண்டு சேர்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமை...  அதன் அடிப்படையில் இப்பதிவுகளை பதிவு செய்கிறேன்.....

சென்ற பதிவில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை திணையில் உள்ள மக்கள், தெய்வம், கருபொருள் போன்றவற்றை கண்டோம்.  இந்த பதிவில் மேற்கண்ட குடிகளுக்கான இலக்கிய சான்றுகளை காண்போம்.....


(குறிப்பு - மறுப்பு இருப்பவர்கள் நாகரிக முறையில் சங்க இலக்கிய சான்றுகளுடன் கமெண்ட்-ல் பதிவு செய்யுங்கள்)


மேற்கண்ட குடிகளுக்கான இலக்கிய சான்று :-


1)குறவர்;-

"நறும் பூ கண்ணி குறவர் சூட" -
(பொரு 219)



2)பள்ளர்;-

"கொண்டை கூழை தண் தழை கடைசியர்/சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்" - (புறம் 61/1,2)


"நெல் அரி தொழுவர் கூர் வாள்_உற்று என" -( நற் 195/6)



3)வேட்டுவர்;-


"ஆயர் வேட்டுவர் ஆடூஉ திணை பெயர்" -(தொல். பொருள். அகத்:21/1)


4)ஆயர்;-

"ஆயர் வேட்டுவர் ஆடூஉ திணை பெயர்" - (தொல்.பொருள். அகத்:21/1)



5)பார்ப்பார்;-

"பார்ப்பார் அறிவர் என்று இவர் கிளவி" - (தொல்.பொருள். செய்யு:189)


6)பரதவர்;-

"பழம் திமில் கொன்ற புது வலை பரதவர்/மோட்டு மணல் அடைகரை கோட்டு_மீன் கெண்டி" - (அகம் 10/10,11)


7)கருமார்;-

"இரும்பு செய் கொல்லன் வெம் உலை தெளித்த" - (நற் 133/9)


8)தட்டார்;-

"பொன் செய் கொல்லனின் இனிய தெளிர்ப்ப" - (நற் 394/3)


9)கன்னார்;-

"மண் திணி ஞாலம் விளங்க கம்மியர்
செம்பு சொரி பானையின் மின்னி" - (நற் 153/2,3)


10)தச்சர்;-

"தச்சன் செய்த சிறு மா வையம்" - (குறு 61/1)


11)குயவர்;-

"பலி கள் ஆர்கை பார் முது குயவன்/இடு பலி நுவலும் அகன் தலை மன்றத்து" -( நற் 293/2,3)


12)பறையர்;-

"துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று" - (புறம் 335/7)


13)பாணர்;-

"பாணர் கூத்தர் விறலியர் என்று இவர்" - (பொருள். கற்:9/25)


14)கல் தச்சர்;-

"சிறப்புடைக் கம்மியர் தம்மொடுஞ் சென்று
மேலோர் விழையும் நூனெறி மாக்கள்
பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து"-(சிலம்பு;வஞ்சி 28/223-225)



15)செங்குந்தர் /கைக்கோளர்;-

"கட்டும் நுண் வினை காருகர் இருக்கையும்" -(சிலம்பு; புகார் 5/17)


16)வெள்ளாளர்;-

"காராளர் சண்பையில் கௌசிகன் என்போன்" -( மணி 3/29)


17)மறவர்;-

"நெஞ்சு நடுக்கு_உறூஉம் துஞ்சா மறவர்/திரை தபு கடலின் இனிது கண்படுப்ப" - (நற் 18/6,7)


18)வண்ணார்;-

"ஊழ்_உறு விளை நெற்று உதிர காழியர்/கவ்வை பரப்பின் வெ உவர்ப்பு ஒழிய" - (அகம் 89/7,8)


ஐம்பெரும் நிலங்களின் தெய்வம், மக்கள், கருப்பொருட்கள் போன்றவற்றை கண்டோம்.
அடுத்த பதிவில் குறவர், இடையர், மள்ளர், பரதர், மறவர் குடிகளின் கிளை குடிகளை காண்போம்....!

                 சரித்திரம் தொடரும்...

N.Ajay

No comments:

Post a Comment

(குறிப்பு - மறுப்பு இருப்பவர்கள் நாகரிக முறையில் சங்க இலக்கிய சான்றுகளுடன் கமெண்ட்-ல் பதிவு செய்யுங்கள்)